பேட்ட படத்திற்கு பின் மீண்டும் இணையும் சிம்ரன் - த்ரிஷா!

Published : Feb 13, 2019, 07:54 PM IST
பேட்ட படத்திற்கு பின் மீண்டும் இணையும் சிம்ரன் - த்ரிஷா!

சுருக்கம்

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் மிக பெரிய ஆதரவை பெற்று வசூலை அல்லி குவித்த படம் 'பேட்ட'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் மற்றும்  த்ரிஷா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.  

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகி ரசிகர்களின் மிக பெரிய ஆதரவை பெற்று வசூலை அல்லி குவித்த படம் 'பேட்ட'. இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக சிம்ரன் மற்றும்  த்ரிஷா ஆகிய இருவரும் நடித்திருந்தனர்.

இந்த படம் மீண்டும் திரையுலகில் தன்னை நிலை நிறுத்திக்கொள்ள போராடிய, சிம்ரனுக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது. த்ரிஷாவும் மாறு பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் மீண்டும் 'மாயன்' என்கிற ஆக்ஷன் படத்தில் நடிக்க உள்ளனர். இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை 'ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் மிக பெரிய பொருள் செலவில் தயாரிக்க உள்ளது. 

மேலும் இந்த படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கவிருப்பதாகவும், இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளிவரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கிய வேடங்களில் நடித்து வரும் த்ரிஷா, சிம்ரன் ஆகியோர்களுக்கு இந்த படம் ஒரு மறக்க முடியாத படமாக இருக்கும் என படக்குழுவினர் கூறியுள்ளனர். 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!