
'காலா' படத்தை தொடர்ந்து இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் ரஜினிகாந்து நடித்து வருகிறார். இந்த படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை.
இந்த படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் இமயமலை பகுதிகளில் நடத்தப்பட்டது. அங்குள்ள ஒரு கல்லூரியிலும் சில முக்கிய காட்சிகள் படமாக்கினர் படக்குழுவினர். இதனால் இந்த படத்தில் ரஜினி அந்த கல்லூரி வார்டன் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது.
அதிரடி காட்சிகள், நகைசுவை நிறைந்த ஜனரஞ்சகமான படமாக இந்த எடுக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இமையமலையை தொடர்ந்து சென்னை, மதுரை, உள்ளிட்ட இடங்களிலும் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாகவும் , பாபிசிம்ஹா முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள தகவில் இந்த படத்தில், மற்றொரு கதாநாயகியும் இருக்கிறாராம். அந்த கதாப்பாத்திரத்தில் நடிகை திரிஷா நடிப்பதாக கூறப்படுதிறது. மேலும் இந்த படத்தில் திரிஷா நடிப்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்துள்ளனர்.
ரசிகர்கள் விரும்பும் வகையில், ரஜினி இந்த படத்தில் நடிப்பதாகவும், இந்த வருட இறுதிக்குள் பட வேலைகளை முடித்து அடுத்த வருடம் ஆரம்பத்தில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ் என கூறப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.