
தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. பாகுபலி படத்திற்கு பின் இவர் முன்னணி கதாநாயகர்கள் படங்களில் நடிப்பதை தவிர்த்து, கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார்.
அந்த வகையில் சமீபத்தில் வெளிவந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில், நடிகர் ஹிருத்திக் ரோஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று ஓப்பனாக கூறி வாய்ப்பு கேட்பது போல் கூறியுள்ளார் தமன்னா.
மேலும் ஹிருத்திக் ரோஷன் குறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து நான் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒருவர் என்றால் அது ஹிருத்திக் தான். அவருடைய கடின உழைப்பு என்னை ஈர்த்தது.
ஹிருத்திக்கை நேரில் பார்க்க வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தேன், அது இப்போது நிறைவேறியது என்று கூறி அவருடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.