
பத்து பக்க வசனம் கொடுத்தாலும் பத்து நிமிடத்தில் மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்து விடுவார் “சிவகார்த்திகேயன்” என்று லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா புகழ்ந்தார்.
மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வேலைக்காரன்’.
இதில் பிரகாஷ் ராஜ், பகத் பாஷில், சினேகா, ஆர்ஜே பாலாஜி, சதீஷ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இப்பட அனுபவம் குறித்து நயன்தாரா ஒரு பேட்டி அளித்தார்:
அதில், “வேலைக்காரன் படத்தில் நடிப்பது மிகவும் சுவாரஸ்யமானது. சிவகார்த்திகேயன் மிகவும் கலகலப்பாக பேசுவார். அவர் இருந்தால் படப்பிடிப்பு தளமே கலகலப்பாக இருக்கும்.
அவர் எப்போது ஏதாவது காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருப்பதால், வேலை பளுவே எனக்கு தெரியவில்லை.
அதே சமயம் பத்து பக்க வசனம் கொடுத்தாலும் 10 நிமிடத்தில் மனப்பாடம் செய்து சிறப்பாக நடித்துவிடுவார் சிவா” என பெருமையாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.