ஏமாற்றிய இயக்குனர் மீது கடும் கோபத்தில் நடிகர் சூர்யா!

By manimegalai aFirst Published Mar 13, 2019, 7:20 PM IST
Highlights

தமிழ் சினிமாவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் மொழி மட்டும் இன்றி இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.
 

தமிழ் சினிமாவில், அதிக ரசிகர் கூட்டத்தை கொண்ட நடிகர்களில் ஒருவர் சூர்யா. தமிழ் மொழி மட்டும் இன்றி இவருக்கு தெலுங்கு திரையுலகிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர்.

இவர் நடிப்பில் கடைசியாக 'தானா சேர்ந்த கூட்டம்' திரைப்படம் வெளியானது. இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்து வரும், 'NGK ' திரைப்படம் பல நாட்களாக உருவாகி வருகிறது. இது குறித்து ஒரு முறை கேள்வி எழுப்பட்டதற்கு, நல்ல கருத்தை கொண்ட படங்கள் தாமதமாக தான் வரும் என பதில் கொடுத்தார்.

மேலும் 'காப்பான்' படமும் இந்த வருடம் திரைக்கு வர உள்ளது.

இந்நிலையில் நடிகர் சூர்யாவிற்கு, பல ஆண்டுகளாவே கிராமத்து பின்னணியில் அமைந்த கதையில் நடிக்க வேண்டும் என்று, அதற்கு ஏற்றாப்போல் ஒரு கதையை தயார் செய்ய கூறி இயக்குனர் பாண்டியராஜிடம் கூறி கால்ஷீட் ஒதுக்கி  கொடுத்திருந்தாராம்.

ஆனால், பாண்டிராஜ் தற்போது  தன்னை ஏமாற்றுவது போல்... சிவகார்த்திகேயன் படத்தை இயக்க சென்றுள்ளது சூர்யாவிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டு வருகிறது. 

click me!