அந்த காட்சியில் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது! 'வாழை' படத்தை பார்த்த பின் ரஜினி வெளியிட்ட அறிக்கை!

Published : Sep 02, 2024, 09:01 PM IST
அந்த காட்சியில் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது! 'வாழை' படத்தை பார்த்த பின் ரஜினி வெளியிட்ட அறிக்கை!

சுருக்கம்

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'வாழை' படத்தை பார்த்து விட்டு... சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய கருத்தை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.  

இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கடந்த 23ஆம் தேதி திரைக்கு வந்த திரைப்படம் 'வாழை'. பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல், எதார்த்தமான கதைக்களத்தில்... வாழை மரத்திற்கு பின்னால் மறைந்திருக்கும், பலரது வலிகளையும் உணர்வுகளையும் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தது இந்த திரைப்படம்.

'வாழை' படத்தின் மூலம், தன்னுடைய சிறு வயதில் தான் பட்ட கஷ்டங்களை இந்த உலகத்திற்கே காட்டியுள்ளார் இயக்குனர் மாரி செல்வராஜ். வாழை தொழிலாளர்களின் வேதனைகளை வெளிப்படையாக பேசியுள்ள இந்த திரைப்படம், தொடர்ந்து அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும், பிரபலங்கள் மத்தியிலும், பாராட்டுகளை குவித்து வருகிறது.

கர்ப்பமாக இருக்கும் வயிற்றை காட்டியபடி.. தீபிகா படுகோன் வெளியிட்ட பிரக்னன்சி போட்டோ ஷூட்!

இந்த படத்தை பார்த்த நடிகர் சூரி, இயக்குனர் பாலா, போன்ற பிரபலங்கள் கண்ணீருடன் இயக்குனர் மாரி செல்வராஜை கட்டி தழுவி தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதே போல் கலையரசனின் கடுமையான உழைப்பு, நிகிலா விமல் மற்றும் திவ்யா துரைசாமியின் நடிப்பு போன்றவை மக்களால் அதிகம் கவனிக்கப்பட்டுள்ளது. சந்தோஷ் நாராயணனின் இசை இப்படத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது என்றால் அது மிகையல்ல.

சுமார் 5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் இதுவரை 25 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாரி  செல்வராஜுக்கு 'வாழை' மற்றொரு மணி மகுடமாக மாறிய நிலையில், இந்த படத்தை பார்த்துவிட்டு தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிக்கை வெளியிட்டு பாராட்டி உள்ளார். 

முதல் முறையாக பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டு.. திக்கு முக்காட வைத்த ஷ்ரத்தா ஸ்ரீநாத்!

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, " மாரி செல்வராஜ் அவர்களுடைய வாழைப்பழம் பார்த்தேன். ஒரு அற்புதமான தரமான படம், தமிழில் ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கு. மாரி செல்வராஜ் தன்னுடைய இளம் பருவத்திற்கே நம்மை அழைத்து செல்கிறார். அதில் அந்த பையன் அனுபவிக்கும் துன்பங்கள், கஷ்டங்கள், அதை நாமே அனுபவிப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. கிளைமாக்ஸில் அந்த பையன் பசி தாங்காமல் அழியும்போது... அந்தத் தாய் என் பையனுக்கு ஒரு கைசோறு சாப்பிட விடவில்லையே என்று கதறும் போதும்... நமது நெஞ்சமெல்லாம் துடிக்கிறது. மாரி செல்வராஜ் தன்னை ஒரு தலைசிறந்த இயக்குனர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். மாரி செல்வராஜ் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் என கூறியுள்ளார்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

கிரிஷ் விவகாரத்தில் யாரும் எதிர்பார்க்காத முடிவை எடுத்த முத்து.. ஆடிப்போன மீனா - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
ஜனனியின் புது பிசினஸுக்கு வந்த சிக்கல்... குடைச்சல் கொடுக்க ரெடியான ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது