ஸ்ரீதேவி மரணத்தில் மர்மம் இருக்கிறதா...? குடும்பத்தினர் எடுத்த அதிரடி முடிவு...!

First Published Mar 8, 2018, 10:42 AM IST
Highlights
srievi life documentary film directed by sonamkapoor


 ஸ்ரீதேவியின் மரணம்:

இன்று வரை  நடிகை ஸ்ரீதேவி இந்த உலகில் இல்லை என்கிற உண்மையை பலரது மனது ஏற்க மறுக்கிறது. தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக விளங்கிய இவரது மரணம் ஒட்டு மொத்த திரையுலகினர், மற்றும் ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது என்பது நாம் அறிந்ததுதான்.

துபாய்:

இவர் , தன்னுடைய நெருங்கிய குடும்ப நண்பர் திருமணத்திற்காக துபாய் சென்றார். திருமணம் முடிந்த நிலையில் மகள் ஜான்விக்காக ஷாப்பிங் செய்வதற்காக அங்கேயே இருக்க முடிவு செய்து பிரபல ஓட்டலில் தாங்கினார்.  

பின் திடீர் இவர் மாரடைப்பு காரணமாக இறந்துவிட்டதாக தகவல்  வெளியானது. இதை தொடந்து ஸ்ரீதேவி குளியல் அறையில் உள்ள பாத் டப்பில் மூழ்கி உயிர் இழந்தார் என கூறப்பட்டதால் இவருடைய மரணத்தில் மர்மம் உள்ளதாக பல தகவல்கள் வெளியானது.

வதந்தி:

இப்படி வெளியான தகவல்கள் வதந்தி என அறிவித்தும் ரசிகர்கள் சிலர் இவரது மரணத்தில் மர்மம் உள்ளதாகவே கருதி வருகின்றனர்.

குடும்பத்தினர் முடிவு:

இந்நிலையில் ஸ்ரீதேவியின் மரணம் குறித்து விளக்கும் வகையில்... ஒரு ஆவணப்படத்தை எடுக்க முடிவு செய்துள்ளனர் குடும்பத்தினர். 

இந்த ஆவணப்படத்தில் ஸ்ரீ தேவி பற்றி நமக்கு தெரியாத பல விஷயங்கள், அவர் குடும்பத்தினரோடு எடுத்துக்கொண்ட அறிய புகைப்படங்கள், அவர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற இடங்கள் உள்ளிட்ட அறிய தகவல்கள் மற்றும் கடைசி நேரத்தில் என்ன நிகழ்ந்தது என்பது குறித்தும் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்த ஆவணப்படத்தை பிரபல நடிகையும் ஸ்ரீதேவியின் உறவினருமான சோனம் கபூர் இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!