கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதியான ஸ்ரீதேவி கடனில் தத்தளித்தாரா....குழப்பும் ஸ்ரீதேவியின் சித்தப்பா....

First Published Feb 28, 2018, 5:49 PM IST
Highlights
sridevi have some money problem so come in acting


ஸ்ரீதேவி


விபத்து

துபாய் நாட்டு சட்டப்படி அவரது பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே ஒப்படைக்கப்படும் என்று கூறப்பட்டது.அந்த உடற்கூறு ஆய்வில் மது போதையால் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்திருக்க கூடும் என்றும் இது ஒரு விபத்து என்று அந்த அறிக்கையில் குறிப்படப்பட்டிருந்தது. 

தணிவிமானம்

இந்நிலையில் உடற்கூறு ஆய்வு முடிந்த பின் ஸ்ரீதேவியின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டு தனி விமானம் மூலம் மும்பை கொண்டு வரப்பட்டது.அந்த விமானத்திற்கு மட்டும் வாடகையாக 70 லட்சம் ரூபாய் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. 

கடன்

இந்த நிலையில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல் இன்னும் சற்று நேரத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
இந்நிலையில் ஸ்ரீதேவியின் சித்தப்பா வேணுகோபால் கூறுகையில்  ஸ்ரீதேவி கடும் கடனில் தத்தளித்து வந்ததாக கூறியுள்ளார். இதனால் தான் பல வருடங்கள் கழித்துமீண்டும் ஸ்ரீதேவி நடிக்க வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

click me!