லாஸ்லியாவால் என் அப்பாவின் பாசம் தெரிய வந்தது..! கமலிடம் குட்டி பெண் பகிர்ந்து கொண்ட நெகிழ்ச்சி சம்பவம்!

By manimegalai aFirst Published Oct 6, 2019, 6:25 PM IST
Highlights


பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, 'பிக்பாஸ்' பைனல் நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு துவங்கியது. பெருவாரியான ரசிகர்கள் மத்தியில், வெள்ளை நிற கோர்ட்டில்... வீறு நடை போட்டு மேடைக்கு வந்த கமல் பேச துவங்கினார்.
 

பிக்பாஸ் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த, 'பிக்பாஸ்' பைனல் நிகழ்ச்சி சரியாக 6 மணிக்கு துவங்கியது. பெருவாரியான ரசிகர்கள் மத்தியில், வெள்ளை நிற கோர்ட்டில்... வீறு நடை போட்டு மேடைக்கு வந்த கமல் பேச துவங்கினார்.

முதல் முறையாக, மக்களிடம் இந்த நிகழ்ச்சியின் மூலம் என்ன தெரிந்து கொண்டீர்கள் என கேள்விகளை கமல் கேட்க, அதற்கு ரசிகர்களும் பதில் கூறினர்.

முதலில் பேசிய ஒரு தம்பதி, சாண்டி அடிக்கடி அவர் மனைவியை பற்றி பகிர்ந்து கொள்ளும் சம்பவங்கள், மற்றும் அவரின் காமெடி பேச்சு ரசிக்கும் படியாக இருந்தது என்றும் தங்களுடைய வாழ்விலும் அது மாற்றத்தை கொண்டு வந்ததாக கூறினர்.

இதை தொடர்ந்து பேசிய ஒரு குட்டி பெண்... தன்னுடைய அப்பா கடையில் வேலை செய்கிறார். நாங்கள் பள்ளிக்கு செல்லும் முன்பே அவர் கடைக்கு கிளம்பி போய் விடுவார். அதே போல் தூங்கிய பிறகு தான் வருவார். இதனால் அவருக்கு எங்கள் மீது பாசமே இல்லை என்று நினைத்தோம். 

ஆனால் லாஸ்லியாவின் அப்பா உள்ளே வந்த அவரிடம் மிகவும் எமோஷ்னலாக பேசியதை பார்த்து விட்டு மறவாது நாள் எங்களுக்காக கடைக்கு லீவ் போட்டு விட்டு, தங்களுடன் இருந்தார். அப்போது தான் என் அப்பாவின் பாசம் தனக்கு தெரிய வந்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் அந்த குட்டி பெண்.

click me!