
இயக்குனர் அருண் ராஜா காமராஜ், இயக்கத்தில் கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி வெளியான திரைப்படங்களில் ஒன்று 'கனா'. இந்த படத்தோடு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளிவந்தாலும், அனைத்தையும் தாண்டி மக்கள் மனதில் இந்த திரைப்படம் இடம் பிடித்தது.
இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ், கிரிக்கெட் பயிற்சியாளராக நடித்த சிவகார்த்திகேயன், மற்றும் குணச்சித்திர வேடத்தில் நடித்த சத்யராஜ் உள்பட அனைவருடைய நடிப்பிற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டு கிடைத்தது.
இரண்டு வாரங்களை கடந்தும், இன்னும் பல திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தின் வெற்றி விழா, நேற்று வடபழனியில் நடந்தது.
இந்த விழாவில் படத்தில் பணியாற்றிய, ஒவ்வொரு கலைஞர்களுக்கும் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. அந்த வகையில் இந்த படத்தில் 'வாயாடி பெத்த புள்ளே' என்ற பாடலை தந்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து பாடிய ஆராதனாவுக்கும் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை சத்யராஜ் வழங்கினார். ஆராதனா பெறும் முதல் விருது இது என்பதால் படக்குழுவினர் இதனை கொண்டாடினர்.
இதை தொடர்ந்து இந்த விழாவில் பேசிய நடிகரும் படத்தின் தயாரிப்பாளருமான, சிவகார்த்திகேயன் "அருண்ராஜாவிற்கு நான் உதவி செய்ததாக பலர் கூறினாலும் அது உண்மையில்லை, என்னுடைய கடமை தான் நான் செய்தேன். நான் அவருக்கு செய்ததை அவர் எனக்கு இரண்டு மடங்காக திருப்பி கொடுத்துவிட்டார். வெற்றியினால் கிடைத்தது பணம் மட்டும் இல்லை, இந்த படத்தால் எனக்கு பேரும் புகழும் கிடைத்தது. இந்த படம் எந்நாளும் பேசப்படும் படமாக கொடுத்த அருண்ராஜாவுக்கு நன்றி ' என நெகிழ்ச்சியோடு கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.