புயல் வேகத்தில் “அயலான்” படக்குழு... சிவகார்த்திகேயன் படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்...!

By manimegalai aFirst Published Jan 26, 2021, 12:06 PM IST
Highlights

படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை தொடர்ந்து, அதன் இறுதிக்கட்ட பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடித்து வரும் அயலான் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்துவிட்டது. இதைதொடர்ந்து கிராபிக்ஸ் பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ரவிக்குமார் இயக்கத்தில், 24 ஏஎம் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘அயலான்’. இதில், சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு உள்பட பலர் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையில், பாடல்கள் பிரமாண்டமாக உருவாகியுள்ளது.


இதற்கிடையில், கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக அனைத்து படப்பிடிப்பு வேலைகளும் மூட்டை கட்டி வைக்கப்பட்டன. இதனால், திரைத்துறையை சேந்த பலரும் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, ஊரடங்கில் தளர்வு அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதையேற்று ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அயலான் படத்தின் சில காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டன.

இறுதிகட்ட காட்சி சமீபத்தில் முடிவடைந்தது. படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்ததை தொடர்ந்து, அதன் இறுதிக்கட்ட பணியில், படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதையொட்டி, படத்தில் அதிகளவு கிராபிக்ஸ் காட்சிகள் உள்ளதால், அதன் அடுத்தகட்ட பணிகளில் களம் இறங்கியுள்ளனர். அனைத்து பணிகளையும் முடித்துவிட்டு, வரும் கிறிஸ்துமஸ் தினத்தில் படத்தை ரிலீஸ் செய்ய உள்ளதாக இயக்குனர் ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.

click me!