
பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கிராமிய மனம் கமழும் பாடல்களை பாடி ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்கள் ராஜலட்சுமி மற்றும் அவருடைய கணவர் செந்தில் கணேஷ்.
மாடர்ன் இசையை கேட்டு ரசிப்பவர்கள் கூட இந்த தம்பதிகளின் தேன் குரலுக்கும், இவர்கள் பாடும் பாடலுக்கும் அடிமையாகி விட்டனர்.
சாதாரண நெசவாளர் குடும்பத்தில் பிறந்து, இசை மீது உள்ள ஆர்வதால் கிராமிய இசையை தேர்வு செய்து பல்வேறு இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இவர்களை உலகமறிய செய்தது இந்த நிகழ்ச்சி என கூறலாம்.
மேலும் இவர் கர்பிணியாக இருந்த போது... விவசயிகளுகாகவும், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார் என செய்து வெளியான போது இவர்கள் மீது மரியாதை கூடியது.
பாடகியாகவும், போராளியாகவும் பலரது கண்களுக்கு தெரிந்த ராஜலட்சுமி தற்போது சிறந்த தொகுப்பளினியாகவும் தெரிந்துள்ளார். இவர் திருமணத்திற்கு முன்பு பிரபல ஊடகத்திற்காக கதை சொல்ல போறோம் என்கிற நிகழ்ச்சியை நடத்தியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.