‘சிந்துபாத்’படத்தை வெளியிட விடாமல் பல கயவர்கள் குறுக்கே நின்றார்கள்’...குமுறும் தயாரிப்பாளர்...

Published : Jun 29, 2019, 10:15 AM IST
‘சிந்துபாத்’படத்தை வெளியிட விடாமல் பல கயவர்கள் குறுக்கே நின்றார்கள்’...குமுறும் தயாரிப்பாளர்...

சுருக்கம்

விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’படம் பல தொந்தரவுகளைக் கடந்து ஒரு வழியாக தியேட்டர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் நிலையில், ‘இப்பட ரிலீஸை ஒட்டி பல இன்னல்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்தேன்’என இப்பட தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன் தெரிவித்துள்ளார். 


விஜய் சேதுபதியின் ‘சிந்துபாத்’படம் பல தொந்தரவுகளைக் கடந்து ஒரு வழியாக தியேட்டர்களுக்கு சென்று சேர்ந்திருக்கும் நிலையில், ‘இப்பட ரிலீஸை ஒட்டி பல இன்னல்களையும் மன உளைச்சல்களையும் சந்தித்தேன்’என இப்பட தயாரிப்பாளர் எஸ்.என்.ராஜராஜன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதம் ஒன்றில்,...பேரன்புடையீர்,
‘சிந்துபாத்’ திரைப்படம் ஜூன் 27 முதல் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு உங்கள் அனைவரின் ஆசிர்வாதங்களுடன் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இப்படத்தை வெளியிடுவதற்கு தடையாக பல நியாயமற்ற கோரிக்கைகளையும் பல முறைகேடான வழிகளில் பிரச்சனைகளையும் நான் சந்திக்க நேர்ந்தது அனைவரும் அறிந்ததே.

ஆர்க்கா மீடியாவின் பணம் பரிக்கும் சூழ்ச்சிகளிலும் க்யூப் நிறுவனத்தின் தயாரிப்பாளர்களுக்கு எதிரான ஒருதலைபட்ச செயல்பாடுகளிலும் பல கயவர்களின் மறைமுக எதிர்ப்புகளிலும் சிக்கி செய்வதறியாது முன்பு அறிவித்த தேதியில் படத்தையும் வெளியிட முடியாமல் பல இன்னல்களுக்கும் மன உலைச்சல்களுக்கும் தள்ளப்பட்டேன். இந்த இக்கட்டான சூழ்நிலையில் இவ்வனைத்து விஷயங்களையும் அறிந்து உடனடியாக எந்த ஒரு தனிப்பட்ட சுயநலமும் லாபமும் இல்லாமல் எனக்காகவும் நியாயத்திற்காகவும் துணைநின்று இறுதிவரை போராடி அனைத்து தடைகளையும் தகர்த்தெறிந்து படத்தை வெளியிட பக்கபலமாக இருந்த மதிப்பிற்குரிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் நான் என்றும் கடமைப்பட்டுள்ளேன். 

இரவு பகல் பாராமல் உடனிருந்து போராடிய அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.உங்களின் முழு ஒத்துழைப்பும் ஒத்துமையாலும்தான் இன்று ‘சிந்துபாத்’ சாத்தியமாகி இருக்கிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்களுக்கென்று ஒரு பிரச்சனை என்றால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் உறுதியாகவும் பக்கபலமாகவும் துணை நிற்கும் என்ற நம்பிக்கையை உருவாக்கிய JSK films சதீஷ்குமார் அவர்களுக்கும் Amma creations T.சிவா அவர்களுக்கும் துணைநின்ற தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் மீண்டும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்.என்று அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் ராஜராஜன்.

இப்பட ரிலீஸுக்கு விஜய் சேதுபதி இரண்டு கோடிகள் கொடுத்து உதவினார் என்று செய்திகள் வந்த நிலையில் ராஜராஜனின் நன்றிப் பட்டியலில் விஜய் சேதுபதியின் பெயர் ஏன் இடம்பெறவில்லை என்பது விளங்கவில்லை.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டுவிஸ்ட் மேல டுவிஸ்ட்; வச்சான் பாரு ஆப்பு; பிக் பாஸில் வெளியேற்றப்படும் போட்டியாளர் இவரா?
பட்டு வேஷ்டி சட்டையில் மணமக்களை வாழ்த்திய தளபதி விஜய் – தயாரிப்பாளர் சிவா இல்ல திருமண நிகழ்ச்சியின் சுவாரஸ்யம்!