இயக்குனர் அட்லீ மீது துணைநடிகை போலீசில் பரபரப்பு புகார்!

By manimegalai aFirst Published Apr 23, 2019, 2:21 PM IST
Highlights

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், இந்துஜா உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.
 

இயக்குனர் அட்லீ தற்போது, விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்கிறார். மேலும், யோகி பாபு, 'பரியேறும் பெருமாள்' கதிர், இந்துஜா உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

இந்த படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் நடைபெற்று வருகிறது. இதில் பல துணை நடிகைகள் கலந்து கொண்டு நடித்து வரும் காட்சி எடுக்கப்பட்டுள்ளது.

அப்போது, துணைநடிகைகளை அட்லீ மற்றும் அவருடைய உதவி இயக்குனர் ஆகியோர் அவமரியாதையோடு நடத்தியதாக, துணைநடிகை கிருஷ்ணா தேவி, என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

click me!