ஹீரோ இவர் என்பதால் மீண்டும் தமிழில் நடிக்க ஓகே சொன்ன ஸ்ருதிஹாசன்!

By manimegalai aFirst Published Jan 31, 2019, 3:28 PM IST
Highlights

இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான, ' சிங்கம் 3 ' ஆம்  பாகத்தில் நடித்து முடித்தபின், ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. ஆனால் அவருடைய அப்பா கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயக்கி நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 
 

இயக்குனர் ஹரி இயக்கத்தில், சூர்யா நடித்து 2017 ஆம் ஆண்டு வெளியான, ' சிங்கம் 3 ' ஆம்  பாகத்தில் நடித்து முடித்தபின், ஸ்ருதிஹாசன் எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை. ஆனால் அவருடைய அப்பா கமல்ஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இயக்கி நடித்து வந்த 'சபாஷ் நாயுடு' படத்தில் மட்டும் நடிக்க ஒப்புக்கொண்டார். ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. 

ஸ்ருதிஹாசனுக்கு தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்புகள் தேடி சென்ற போதிலும் ஒரு சில காரணங்களுக்காக அதனை மறுத்து விட்டு, தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார். இந்த படத்தை . 'இயற்கை, ஈ, பேராண்மை,  'புறம்போக்கு' உள்ளிட்ட படங்களை இயக்கிய ஜனநாதன் இயக்குகிறார். 

சுமார் 4 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இவர் இயக்க உள்ள,  இந்த படத்தில், ஸ்ருதி நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க உள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக தமிழில் நடிக்க வந்த வாய்ப்புகளை தொடர்ந்து மறுத்து வந்த ஸ்ருதிஹாசன், இந்த படத்தில் நடிக்க காரணம்,விஜய் சேதுபதி  ஹீரோவாக நடிக்கிறார்  என்கிற ஒரே  காரணத்திற்காக தானாம். இதனால்  இயக்குனர் படம் குறித்து சொன்னதுமே நடிக்க ஒப்புக்கொண்டாராம் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் தமிழில் ஒரு ரவுண்டு வருவாரா? ஸ்ருதி பொறுத்திருந்து பார்ப்போம்.


 

click me!