
சீரியல் நடிகை ஜெனிபர் ரேகாவின் கணவர், கோபிநாத் கள்ளக்காதல் பிரச்சனை காரணமாக மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால் அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த ஓரிரு மாதமாகவே சீரியல் பிரபலங்கள் பற்றிய விஷயம் சமூக வலைத்தளத்தில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சீரியல் நடிகையின் கணவர் கோபிநாத் என்பவர் கள்ளக்காதல் பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே, கோபிநாத்துக்கு அவருடைய அலுவலகத்தில் பணியாற்றி வரும் பெண் ஒருவருடன் தவறான தொடர்பு உள்ளது, அவருடைய மனைவியும் நடிகையுமான ரேகாவிற்கு தெரியவர, அடிக்கடி இது குறித்து பிரச்சனை செய்துள்ளார்.
கிறிஸ்துமஸ் தினத்தன்றும் இந்த பிரச்சனை இவர்களுக்குள் வந்துள்ளது. மேலும் கடன் பிரச்சனை காரணமாக மன உளைச்சலிலும் இருந்துள்ளார். மனைவியை சமாளிக்க முடியாமல், ஒரு நிலையில் தன்னுடைய அலுவலகத்திற்கு சென்றுள்ளார். கிருஸ்துமஸ் விடுமுறை என்பதால், அலுவலகத்தில் யாரும் இல்லை.
எனவே தன்னுடைய பிரச்சனைகளை எப்படி சமாளிப்பது என தெரியாமல், அலுவலகத்திலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மறுநாள் அலுவலகத்திற்கு வந்து பார்த்தவர்கள், இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து பின்னர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசார் விசாரணையில், தற்கொலை செய்து கொண்ட நடிகை ரேகாவின் கணவர் கள்ளக்காதல் பிரச்சனை மற்றும் கடன் பிரச்சனையின் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளது தெரியவந்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.