விடாது தொடர்ந்த கள்ளக் காதல்..!! தற்கொலை முடிவெடுத்த சீரியல் நடிகை , சின்னத்திரையில் பரபரப்பு...!!

Published : Jan 16, 2020, 01:14 PM IST
விடாது தொடர்ந்த கள்ளக் காதல்..!!  தற்கொலை முடிவெடுத்த சீரியல் நடிகை ,  சின்னத்திரையில் பரபரப்பு...!!

சுருக்கம்

 திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் .   

சின்னத்திரை நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயற்சி செய்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் . ஜெயஸ்ரீ மற்றும் அவரது கணவர் ஈஸ்வர் இடையே கடந்த ஒரு மாத த்திற்கும் மேலாக மோதல் உக்கிரமானதையடுத்து அவர் இந்த முடிவு எடுத்துள்ளார்.   பிரபல தொலைக்காட்சி  தொடர் ஒன்றில் வில்லியாக நடித்து பிரபலமானவர் ஜெயஸ்ரீ ,  அதேபோல் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியான பல்வேறு சீரியல்களில் நடித்து பிரபலமானவர் ஈஸ்வர் இந்நிலையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட காதலையடுத்து  கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் .  பின்னர் திருவான்மியூர் காமராஜர் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் குடும்பத்துடன் வசித்து வந்தனர் .  

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ  அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று கொடுத்தார் ,  அதில் தனது கணவர் ஈஸ்வர் ,  அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக கூறினார் .  தன் கணவர் பிரபல தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துள்ளார் எனவே அந்த நடிகையை திருமணம் செய்து கொள்வதற்காகவே என்னையும்  என் மகளையும் கொடுமைப்படுத்தி வருகிறார் ,  அத்துடன்  தன்னிடம் இருந்த 30 லட்சம் ரூபாய் பணத்தை  என கணவர்  ஈஸ்வரா அபகரித்துக் கொண்டு தன்னை ஏமாற்றி விட்டதாகவும் ,  எனவே தற்போது குழந்தையுடன் நடுத்தெருவில் தவித்து வருவதாகவும் அவர் அந்த புகாரில் தெரிவித்திருந்தார்,  இதனையடுத்து புகார் மீது வழக்குப்பதிவு செய்த அடையாறு மகளிர் போலீசார் , ஈஸ்வரிடம்  விசாரணை நடத்தினர் . அதில்  மனைவியை கொடுமைப்படுத்தியதாக அவர் ஒப்புக்கொண்டார் .  

அதனையடுத்து  அவரை கைது செய்த போலீசார் , அவரை சிறையில் அடைத்தனர் .  ஈஸ்வர் ஜெயஸ்ரீ விவகாரம் சின்னத்திரையில்  பரபரப்பை ஏற்படுத்தியது . இந்நிலையில் ஈஸ்வர் நடித்துவந்த தொடர்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார் . இந்நிலையில்  குடும்ப பிரச்சினை காரணமாக தனக்கு ஏற்பட்ட மன வருத்தத்தில் இருந்தார் ஜெயஸ்ரீ , இந்நிலையிலேயே தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார் .  தற்கொலைக்கு முயன்ற அவரை  மீட்டு பெற்றோர்கள் சென்னையில் உள்ள தனியார் மருத்துமனையில் அனுமதித்துள்ளனர் .  தீவிர சிகிச்சைப் பிரிவில்  அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை வழங்கி வருகின்றனர் .கள்ளக் காதல் விவகாரத்தில் கணவர் சிறைக்கு சென்றுள்ள நிலையில் ,  மனைவி தற்கொலைக்கு முயன்று இருப்பது  சின்னத்திரையில் மிண்டும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?