அசிங்கப்பட்டு போயிடுவீங்க... நடந்தது என்ன? கோபத்தில் கொந்தளித்த சித்தப்பு சரவணன்!

By manimegalai aFirst Published Jul 11, 2019, 3:09 PM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து யார் சண்டை போட்டு கொள்வார்கள். என்ன பிரச்சனை வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறலாம். 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் அடுத்தடுத்து யார் சண்டை போட்டு கொள்வார்கள். என்ன பிரச்சனை வரும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது என கூறலாம். கடந்த வாரம் முழுக்க அபிராமி - மதுவின் சண்டை பரவலாக பேசப்பட்ட நிலையில், இந்த வாரம் ஒவ்வொரு நாளும் புது புது பிரச்னையை எழுப்பி வருகிறார்கள் போட்டியாளர்கள்.

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், "எல்லா டாஸ்க்கிலும் கலந்து கொண்டுள்ளேன். உங்கள் எல்லோருக்கும் சீன் அனைத்தும் சொல்லிக்கொண்டு அமர்ந்திருக்கிறேன் ஒருவர் கூட தனக்கு சப்போர்ட் செய்யவில்லை என கூறுகிறார்.

எல்லோரும் அமைதியாக ஆக நான் உள்ளே போகணும் என உட்காந்து கொண்டிருக்கிறீர்கள் என கூறுகிறார். இதற்கு ஏதோ சாண்டி சமாதானம் கூற... அதற்கு அதெல்லாம் தப்பு பா... பேசாதே என கோபமாக பேசுகிறார்.  இதன் மூலம் தனக்கு ஒரு விஷயம் தெரிந்து விட்டது, அவன் அவன் அவனுடைய வேலையை போய் பாருங்கள்... அசிங்கப்பட்டு போயிடுவீங்க அவ்வளவு தான் என கோபத்தில் கொந்தளித்து பேசியுள்ளார்.  

என்னடா பண்ணீங்க?! - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/6TrQERafnq

— Vijay Television (@vijaytelevision)

click me!