கடந்த வருடம் சின்னத்திரை நட்சத்திரங்கள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்த மரணங்களில் ஒன்று, நடிகை சபர்ணாவின் மரணம்.
பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக அறிமுகமாகி, பின் சின்னத்திரையில் பல சீரியல்களில் நடித்து பிரபலமாகி வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் நடித்தவர் சபர்ணா.
இவர் திடீர் என கடந்த வருடம், பூட்டிய வீட்டிற்குள் நிர்வாணமான நிலையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது வரை இவருடைய மரணத்திற்கான காரணம் கண்டுபிடிக்க முடியவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவருடைய நெருங்கிய தோழி, சீரியல் நடிகை உஷா எலிசபெத், சபர்ணாவின் தற்கொலை குறித்து அதிரடியாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளார் அவர் இதுகுறித்துக் கூறுகையில்... பல நாட்களாக சபர்ணா நடிப்பு வாய்ப்புகள் எதுவும் கிடைக்க வில்லை என கூறிவந்ததாகவும் இதன் காரணமாக அவர் பல நாட்களாக மன உளைச்சலில் காணப்பட்டதாகவும், ஆனால் நான் அவருக்கு பல முறை எல்லாம் சரியாகிவிடும் என ஆறுதல் கூறியும் அவர் இதுபோன்ற முடிவை எடுத்துவிட்டார் எனவும் கூறியுள்ளார்.