’இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள்'...’சங்கத் தமிழன் விநியோகஸ்தர் கண்ணீர்க் கடிதம்...

By Muthurama LingamFirst Published Nov 16, 2019, 2:32 PM IST
Highlights

கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும்  பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம். 

விஜய் சேதுபதியின் ‘சங்கத் தமிழன்’தமிழகம் முழுவதும் ரிலீஸாகி ஓரளவு நல்ல ரிப்போர்ட்டுடன் ஓடிக்கொண்டிருக்கும்  நிலையில் அப்படத்தை வெளியிட்டிருக்கும் விநியோகஸ்தர் லிப்ரா புரடக்‌ஷன்ஸ் சந்திரசேகர் உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் படத்தின் ஹீரோ விஜய் சேதுபதியையும் குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சற்றுமுன்னர் அவர் வெளியிட்டிருக்கும் கடிதத்தின் விபரம் வருமாறு,...அனைவருக்கும் வணக்கம். கிட்டதட்ட 48 மணி நேரம் , பல பொய் குற்றச்சாட்டுக்கள் , பல பொய்யான தகவல்கள் என் மீதும் என் லிப்ரா நிறுவனம் மீதும் இவையனைத்திற்கும்  பதிலும் , உண்மையும் தெரிந்தும் எதையும் பேசாமல் எந்த உண்மையையும் வெளியில் சொல்லாமல் ,எல்லா அவமானங்களையும் தாங்கிகொண்டு , விஜயாபுரொடக்சன்ஸ்க்கு நான் செய்து கொடுத்த சத்தியத்தை காப்பாற்ற மிகப்பிரமாண்டாமான முறையில் புரமோட் செய்து 350+ க்கும் மேற்ப்பட்ட திரையில் வெளியீடு செய்துள்ளோம். 

இதற்கு முழு ஆதரவு தந்த விஜயா புரொடக்ஷன்ஸ் சுந்தர் , பாரதிரெட்டி மேடம்  , இயக்குனர் விஜய் சந்தர் அவர்களுக்கும் எங்கள் நன்றிகள். இறுதிவரை என்னுடன் இருந்து என் உடன்பிறவா அண்ணணாக உதவிய பெடரேசன் தலைவர் அருள்பதி , அவருடன் சேர்ந்து  உதவிய JSKகோபி , தேனாண்டாள் முரளி ,  H.முரளி அவர்களுக்கும் எங்கள் இதயம் கனிந்த நன்றிகள். 

இதுவரை இல்லாத அளவு இந்த படத்தை மிகப்பிரமாண்டமாக ரிலிஸ் செய்யலாம் என்று போராடிக்கொண்டிருக்கும் போதே , படத்திற்கு நெல்லையில் தடை , லிப்ராவிற்கு டெஃபிஸிட் , இடையே திடீரென்று எங்கள் நாயகன்  விஜய்சேதுபதி அவர்களின் என்றும் தீரா பிரச்சனை என்ற இண்டர்வியூ இவற்றிற்கிடையே எங்களுடைய ஒரே நோக்கம் படத்தை வெளிகொண்டுவருவது மட்டுமே. ஒவ்வொரு முறை விழுந்து எழுந்து மேலே வரும்போதும் எத்தனை இடைஞ்சல்கள் , கேலிகள் , அவமானங்கள் , புறக்கணிப்புகள் ஆனால் எது நடந்தாலும் இந்த லிப்ரா புரொடக்சன்ஸ் கொண்ட கருத்தில் மாறப்போவது இல்லை. ஒருத்தங்க மேல ஈசியா குற்றச்சாட்டை சொல்லிவிட்டு கேலிசெய்துவிட்டு போய்விடலாம் , ஆனா அவர்களுக்கான பதிலை காலம் நின்றுசொல்லும் என்ற நம்பிக்கை எப்போதும் உள்ளது எங்களுக்கு, எங்களுடைய ஒரே நோக்கம் எடுத்த வேலையை ஒழுங்காக செய்து அதை சரியான இடத்திற்கு கொண்டுசெல்வது மட்டுமே அதை எப்போதும் லிப்ரா செய்துகொண்டுதான் இருக்கும்.

click me!