நடிகை ரம்பா, நீண்ட இடைவெளிக்குப் பின் தனது சக நடிகரான சல்மான் கானை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
உழவன், உள்ளத்தை அள்ளித்தா, செங்கோட்டை என தமிழில் தொடர்ச்சியாக ஹிட்டடித்த தொடையழகி ரம்பா, தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். தற்போது திருமணமாகி குடும்பத்தினருடன் செட்டில் ஆகிவிட்ட ரம்பா, நடிப்பதில் இருந்தே ஒதுங்கியுள்ளார். தற்சமயம், தனது கணவரும், தொழிலதிபருமான இந்திரகுமார் பத்மநாதன் உடன் கனடாவில் ரம்பா வசித்து வருகிறார்.
இவர் புகழின் உச்சத்தில் இருந்த நாட்களில், பாலிவுட்டில் அமோக வரவேற்பு இருந்தது. அந்த காலகட்டத்தில், 1997ம் ஆண்டு, சல்மான் கான் உடன் ஜோடி சேர்ந்து, ஜூத்வா என்ற படத்தில் ரம்பா நடித்திருந்தார். இந்த படம் ஹிட் அடித்த நிலையில், அதன்பின் ரம்பா, சல்மான் கானுடன் ஜோடி சேரவில்லை. இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின், நடிகை ரம்பா, சல்மான் கானை நேரில் சந்தித்துப் பேசிய புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு கனடாவில் நடைபெற்றுள்ளது. நடிகர் சல்மான் கான் தனது பாலிவுட் நண்பர்களுடன் கனடாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.