
ஆவடியில் தனது இரண்டாவது கிளையை தொடங்கியது ரோகினி திரையரங்கம். முதல் படமே சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் தான்.
ஹீரோக்கள் தொடர்ந்து படங்களில் நடிப்பது ஒன்றும் ஆச்சரியமில்லை. ஆனால், அவர்களது படங்களுக்கு திரையரங்குகள் கிடைப்பது தான் குதிரைக் கொம்பாக உள்ளது.
அந்த வகையில், வரும் 22-ஆம் தேதி மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள வேலைக்காரன் படம் வெளியாகவுள்ளது.இதில், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இதனையொட்டி, கோயம்பேட்டில் சிறந்து விளங்கும் ரோகினி திரையரங்கம் ஆவடியின் அதன் புது கிளையைத் திறந்துள்ளது.
ஆறு திரைகளை கொண்ட ரோகினி ஆவடியில் ரெமி சினிமாவை வாங்கியுள்ளது. அதற்கு ரோகினி என்று பெயரிட்டு சென்னையில் தனது 2-வது கிளையை திறந்துள்ளோம் என்று தங்களது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
இந்தத் திரையரங்கில் வெளியிடப்படும் முதல் படம் சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படம் தான். சிவகார்த்திகேயனின் தீவிர ரசிகரானா ரோகினி திரையரங்கம் தனது இரண்டாவது கிளையை தொடங்கியதில் பெரு மகிழ்ச்சி அடைகிறது என்றும் அந்த பதிவில் தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.