முதல் ஆளாக கோமதியை சந்தித்து பரிசு தொகையை வழங்கிய ரோபோ சங்கர்!

Published : Apr 27, 2019, 12:25 PM IST
முதல் ஆளாக கோமதியை சந்தித்து பரிசு தொகையை வழங்கிய ரோபோ சங்கர்!

சுருக்கம்

சின்னத்திரையில், ஸ்டாண்ட்  அப் காமெடியனாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட, ரோபோ ஷங்கர் இன்று முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார்.   

சின்னத்திரையில், ஸ்டாண்ட்  அப் காமெடியனாக தன்னை ரசிகர்களிடம் அறிமுகப்படுத்திக்கொண்ட, ரோபோ ஷங்கர் இன்று முன்னணி நட்சத்திரங்களான விஜய், அஜித் ஆகியோர் படங்களில் முன்னணி காமெடியனாக நடித்து வருகிறார். 

மேலும் தன்னை தூக்கி விட்ட விஜய் தொலைக்காட்சியிலும், காமெடி  ஷோ ஒன்றில் நடுவராக இருந்து வருகிறார்.

இவர் செய்துள்ள ஒரு செயல் தான் இன்று பலரது மத்தியிலும் இவர் மீது ரசிகர்களுக்கு இருந்த மரியாதையை மேலும் உயர்த்தியுள்ளது. 

அதாவது... " தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்த, தங்க மங்கை கோமதி மாரிமுத்துவிற்கு' அரசு சார்பில் பரிசு அறிவிக்காததற்கு முன்பே... அவரை பாராட்டி ரூ.1 லட்சம் கொடுக்க உள்ளதாக கூறினார்.

அவர் சொன்னது போலவே, ரோபோ சங்கர் கோமதி மாரிமுத்துவை நேரில் சந்தித்து,  ரூபாய் ஒரு இலட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார். இந்த செயல் ரசிகர்கள் மட்டும் இன்றி பிரபலங்களையும் பாராட்ட வைத்துள்ளது. இந்த செய்தியை pro டைமண்ட் பாபு அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்
Dhanush Net Worth : விளம்பரத்திற்கே கோடிகளில் சம்பளம்.. வாயை பிளக்க வைக்கும் ஆடம்பர வீடு, கார்கள்.. தனுஷின் சொத்து மதிப்பு இவ்வளவா?