
பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் ராஷ்மிகா மந்தனா தற்போது தமிழ், தெலுங்கு மட்டுமல்லாது பாலிவுட்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தமிழ் மொழியில் கார்த்தி நடிப்பில் வெளியான சுல்தான் படம் மூலம் அறிமுகமாகி விஜய்யின் வாரிசு படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தர். ஆனால் துரதிர்ஷ்டவிதமாக இந்த இரு படங்களிலும் அவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை.
ஆனால் தெலுங்கு, இந்தி என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அண்மையில் ராஷ்மிகா நடிப்பில் இந்தியில் வெளியான அனிமல் படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. இதனைத் தொடர்ந்து தற்போது புஷ்பா 2, ரெயின்போ, கேர்ள் பிரண்ட் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த ராஷ்மிகாவை பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் அவருடன் இணைந்து செல்பி எடுக்க முற்பட்டனர். அப்போது உணர்ச்சிவசப்பட்ட ரசிகர் ஒருவர் ராஷ்மிகாவின் கையை பிடித்து செல்பி கேட்டார். அப்போது அவர் ஒரு நிமிடம் அசௌகரியமாக உணர்ந்ததாக சொல்லப்படுகிறது. இருப்பினும் யாரிடமும் கோபத்தை வெளிப்படுத்தாமல் புன்னகையுடன் கடந்து சென்றார். ராஷ்மிகாவின் இந்த செயலை ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.