
நடிகை ரம்பா தன்னுடைய கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெறுவதற்காக நீதி மன்றத்தை நாடினார்.
மேலும் சமீபத்தில் தன்னுடைய கணவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என கூறி, மற்றொரு மனுவை தாக்கல் செய்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து குடும்ப நல நீதி மன்றம் இருவரிடமும் விசாரணை நடத்தியபோது. இருவரும் தங்களுடைய குழந்தைகளின் நலனை கருதி சேர்ந்து வாழ ஒத்துக்கொண்டனர்.
இதனை தொடர்ந்து தற்போது, தன்னுடைய கணவருடன் சேர்ந்துவாழ தொடங்கியுள்ள நடிகை ரம்பா, அவரது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.