
நேற்று வெளியான எஸ்.எஸ்.ராஜமெளலியின் 'பாகுபலி 2' திரைப்படத்தை பார்த்த பிரபலங்கள் அனைவரும் புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.
ஒரு தென்னிந்திய படத்திற்கு கிடைத்த இப்படி பட்ட வரவேற்பை பார்த்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி அடைந்துள்ளதாக பிரபல இயக்குனர் ராம்கோபால் வர்மா தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் 'பாகுபலி 2' திரைப்படம் யானை அல்ல, டைனோசர். அதனால் தான் நாய், புலி, சிங்கம் போன்ற இயக்குனர் ஓடி ஒளிந்து கொண்டனர். 'பாகுபலி 2' படத்தின் வெற்றியை காண சகிக்காமல் பாலிவுட் திரையுலகினர் தங்கள் காதுகளை மூடிக்கொள்கின்றனர்.
பாலிவுட் பட உலகின் கான்கள், ரோஷன்களை விட ராஜமெளலி பெரியவர். உலகில் உள்ள காலத்தை கிமு, கிபி என்று பிரிக்கப்பட்டது போல இனிமேல் இந்திய சினிமா பாகுபலிக்கு முன் பாகுபலிக்கு பின் என்று பார்க்கப்படப் போகிறது என்று கூறி தன்னுடைய வாழ்த்துக்களை பாகுபலி படக்குழுவினருக்கு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.