சர்ச்சை இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர், பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. தற்போது இவரை தொடர்ந்து இவருடைய மருமகளும் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
சர்ச்சை இயக்குனராக அனைவராலும் அறியப்பட்டவர், பிரபல தெலுங்கு இயக்குனர் ராம்கோபால் வர்மா. தற்போது இவரை தொடர்ந்து இவருடைய மருமகளும் தயாரிப்பாளராக அறிமுகமாக உள்ளார். இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.
கோலிவுட் திரையுலகில், விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' படத்தில், அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதைத்தொடர்ந்து விஜய், விக்ரம், விஷால், சூர்யா, என அடுக்கடுக்காக பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபலமானார்.
தமிழை தவிர தெலுங்கு, மலையாளம், உள்ளிட்ட மொழிகளிலும் நடித்த இவர், தற்போது பாலிவுட் திரையுலகில் அறிமுகமாகி உள்ளார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில், உருவாகும் படம் ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து இவர், ராம் கோபால் வர்மாவின் மருமகள் ஷ்ரவ்யா தயாரிக்கவுள்ள புதிய படத்திலும் நடிக்க உள்ளார். இந்த படம் குறித்து கூறுகையில், இது தனது கனவுப் படம் என்றும், கீர்த்தி சுரேஷுடன் தன்னுடைய முதல் பயணம் தொடங்குவதில் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். மேலும் இவரின் இந்த புதிய முயற்சிக்கு ஊக்கமளிக்கும் வகையில் தயாரிப்பாளர் தில்ராஜு இந்த படத்தை விநியோகம் செய்ய ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் நாகேஷ் காகுநூர், ஹீரோவாக நடிக்க உள்ளதாகவும் ஜகபதி பாபு உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் ஷ்ரவ்யா.