
கேட்பவர் திகைப்படையும் வகையில் ரூ 2 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர மோதிரம் ஒன்றை நடிகை தமன்னாவுக்கு அன்புப்பரிசாக வழங்கியுள்ளார் ஷைரா நரசிம்ம ரெட்டி படத்தயாரிப்பாளர் ராம்சரணின் மனைவி உபசனா. இத்தகவலை நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் கனவுப்படமான ‘ஷைரா நரசிம்ம ரெட்டி’கடந்த2ம் தேதி இந்தியா முழுக்க பல்வேறு மொழிகளில் வெளியாகி மாபெரும் கலெக்ஷனை அள்ளிவருகிறது. சிரஞ்சீவியுடன் அமிதாப்,சுதீப்,விஜய் சேதுபதி,நயன்தாரா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் தமன்னா சிரஞ்சீவியின் காதலியாக நடித்திருந்தார்.
படம் வெளியாகி சரியாக ஒருவாரம் ஆகியுள்ள நிலையில் தமன்னாவுக்கு ரூ 2 கோடி மதிப்புள்ள ராட்சச வைர மோதிரத்தைப் பரிசளித்துள்ள ராம்சரணின் மனைவி அதை ட்விட்டர் பக்கத்திலும் பகிர அதற்கு நன்றி தெரிவித்துள்ள தமன்னா,...இந்த பாட்டில் ஓபனர் வைர மோதிரத்தில் பல நல்ல நினைவுகள் அடங்கியுள்ளது.விரைவில் உங்களை நேரில் சந்திக்கிறேன்’என்று பதில் ட்விட் செய்துள்ளார்.
இந்த மோதிரம் இதுவரை விற்பனையாகியுள்ள மோதிரங்களில் உலகின் 5 வது பெரிய மோதிரம் என்று சொல்லப்படுகிறது. இவ்வளவு பெரிய பரிசளிப்பின் பின்னணி என்ன என்பது தெரியாமல் சக நடிகைகள் திகைத்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக இதே படத்தில் நயன்தாராவும் நடித்திருந்த நிலையில் தமன்னாவுக்கு மட்டும் ஏன் என்ற கேள்வி எழாமல் இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.