சூர்யா படத்தை உதறி எறிந்துவிட்டு சூப்பர் ஸ்டார் படத்துக்குத் தாவுகிறாரா ‘விஸ்வாசம்’ சிவா?...

By Muthurama LingamFirst Published May 28, 2019, 3:04 PM IST
Highlights

‘தர்பார்’படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்குக் கிளம்பும் முன்னர் மோடியின் பதவியேற்புக்குச் செல்லவேண்டிய பரபரப்பான சூழ்நிலையிலும் ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவாவை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசியிருப்பது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

‘தர்பார்’படத்தின் இரண்டாவது ஷெட்யூலுக்குக் கிளம்பும் முன்னர் மோடியின் பதவியேற்புக்குச் செல்லவேண்டிய பரபரப்பான சூழ்நிலையிலும் ‘விஸ்வாசம்’ பட இயக்குநர் சிவாவை தனது போயஸ் தோட்ட இல்லத்தில் ரஜினி ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சந்தித்துப் பேசியிருப்பது கோடம்பாக்கத்தின் பரபரப்பான செய்தியாகியுள்ளது.

சிவா அடுத்தபடியாக ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் சூர்யாவை வைத்து ஒரு படம் இயக்கவிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தி வெளியான சில தினங்களிலேயே ஞானவேல் ராஜாவின் ‘மிஸ்டர் லோக்கல்’ படம் படம் தோல்வி அடைந்ததால் சூர்யா-சிவா படத்தைத் தொடங்குவதில் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வந்தன.

இந்நிலையில் சூர்யாவின் இயக்குநர் சிவா ரஜினியை அவர் இல்லத்தில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சந்தித்திருப்பது பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது. ரஜினி-சிவாவின் சந்திப்பில் அவரிடம் ரஜினி தனது அடுத்த படத்துக்கான கதை கேட்டிருப்பதாகவும் ‘பேட்ட’ படத்தோடு ரிலீஸாகி அதகளம் செய்த ‘விஸ்வாசம்’ டைரக்டரை வைத்தே அஜீத்தை விட தான் எவ்வளவு பெரிய வசூல் மன்னன் என்று காட்டவேண்டும் என்று ரஜினி முடிவு செய்திருப்பதாகவும் சில யூகங்கள் நிலவுகின்றன.

சும்மா பேருக்கு மட்டும் அவ்வப்போது அரசியல் பேசும் ரஜினி அடுத்தடுத்த படங்களுக்குக் காட்டும் ஆர்வத்தைப் பாருங்கள்.  இன்றைய சிவாவையும் சேர்த்து கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத், கார்த்திக் சுப்பாராஜ் ஆகிய நான்கு இயக்குநர்களிடம் கதை கேட்டிருக்கிறார் ரஜினி.

click me!