
’ஏற்கனவே பா.ரஞ்சித் படத்துல நடிச்சுட்டு நான் பட்ட பாடே போதும். இனிமே அரசியல் பேசுற சப்ஜெக்டை வச்சுக்கிட்டு என் கிட்ட யாரும் கதை சொல்ல வராதீங்க’என்று சூப்பர் ஸ்டார் ரஜினி கோபப்பட்டதாக இயக்குநர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
‘காக்கா முட்டை’,’ஆண்டவன் கட்டளை’ ஆகிய இரு தரமான படங்களை இயக்கியுள்ள மணிகண்டன் தற்போது தனது மூன்றாவது படமாக கடைசி விவசாய்’என்ற படத்தை இயக்கி வருகிறார். 85 வயதுடைய நிஜ விவசாயி ஒருவர் கதையின் நாயகனாக இப்படத்தில் விஜய் சேதுபதி குறிப்பிடத்தக்க பாத்திரம் ஒன்றில் நடித்துவருகிறார். அவரது கெட் அப் கூட இரு தினங்களுக்கு முன்பு வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்நிலையில் விஜய் சேதுபதி பாத்திரத்தில் நடிக்கவைக்க மணிகண்டன் முதலில் ரஜியை அணுகியதாகவும், கதையக் கேட்ட அவர் பதறிப்போய்,’விவகாரமான அரசியல் பேசும் அந்தக் கதையில் தான் நடிக்க விரும்பவில்லையென்றும் ஏற்கனவே பா.ரஞ்சித்தின் கபாலி, காலா படங்களில் நடித்த வகையில் சில அர்சியல்வாதிகள் தன்மேல் கோபமாக இருப்பதாகவும் தெரிவித்து மணிகண்டனைத் தவிர்த்திருக்கிறார். அடுத்துதான் தனது நண்பர் விஜய்சேதுபதியிடம் அந்த கேரக்டரை பண்ணச்சொல்லி கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.