தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்... இன்று மாலைக்குள் முடிவு அறிவிப்பு

 
Published : Apr 02, 2017, 09:31 AM ISTUpdated : Sep 19, 2018, 03:06 AM IST
தொடங்கியது தயாரிப்பாளர் சங்கத்தேர்தல்... இன்று மாலைக்குள் முடிவு அறிவிப்பு

சுருக்கம்

producers council election started

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெற்று வருகிறது.

தலைவர், துணைத்தலைவர், செயலாளர்,பொருளாளர் என 27 பதவிகளுக்கான வாக்குப்பதிவு சென்னை அண்ணாநகரில் உள்ள கந்தசாமி கல்லூரியில் இன்று காலை தொடங்கியது.

இதில் கேயார், ஆர்.ராதாகிருஷ்ணன், விஷால் ஆகியோர் தலைமையில் மொத்தம் மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் அணிகளை விட விஷாலின் நம்ம அணியே இத்தேர்தலில் அதிக செல்வாக்கு செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

கடந்த வாரத்தில் நடிகர் சங்கத்தின் புதிய கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டும் விழாவை நடத்தியது உள்ளிட்டவைகள் விஷால் அணிக்கு சாதகமாக அமையும் என்று கருதப்படுகிறது. இருப்பினும் பழைய தயாரிப்பாளர்கள் அனைவரும் கேயார் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோருக்கே ஆதரவு அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!