ஆறு படங்கள் நாளை ரிலீஸாகுமா?...முடங்கும் தயாரிப்பாளர் சங்கம்...

Published : Dec 20, 2018, 12:20 PM IST
ஆறு படங்கள் நாளை ரிலீஸாகுமா?...முடங்கும் தயாரிப்பாளர் சங்கம்...

சுருக்கம்

இன்று ‘சீதக்காதி’ படம் மட்டும் ரிலீஸாகிவிட்ட நிலையில் நாளை தனுஷின் மாரி2, அடங்கமறு, கே.ஜி.எஃப், கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் நாளை ரிலீஸாகவுள்ளன.


தயாரிப்பாளர் சங்கத்தின் பூட்டை விஷால் கோஷ்டியினர் திறக்க அனுமதிக்காமல் அவர்களைப் போலீஸார் கைது செய்திருப்பதின் மூலம் நாளை ரிலீஸாகவுள்ள ஆறு படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்று ‘சீதக்காதி’ படம் மட்டும் ரிலீஸாகிவிட்ட நிலையில் நாளை தனுஷின் மாரி2, அடங்கமறு, கே.ஜி.எஃப், கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் நாளை ரிலீஸாகவுள்ளன.

இப்படங்கள் கியூப்,யு.எஃப்.ஓ. உள்ளிட்ட ஃபார்மேட்களில் ரிலீசாவதற்கு தயாரிப்பாளர் சங்கம் பப்ளிசிட்டி கிளியரன்ஸ் சர்டிபிகேட் உட்பட சில ஆவணங்களை அளிக்கவேண்டும். தற்போது தலைவர் விஷாலும் அவரது ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டு கல்யாண மண்டபங்களில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் மேற்படி படங்களில் ரிலீஸுக்கு மாற்று ஏற்பாடு செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் போலீஸார் விஷால் குழுவினருக்கு எதிரான மன நிலையில் இருப்பதால் தயாரிப்பாளர் சங்கம் தமிழக அரசால் எந்த நிமிடமும் முடக்கப்படலாம் என்று தகவல் பரவுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!