பிக்பாஸ் வின்னர் இவர்தானா? வீட்டிற்குள் சென்ற தொகுப்பாளினி ப்ரியங்கா மறைமுகமாக வெளிப்படுத்திய விஷயம்!

By manimegalai aFirst Published Oct 3, 2019, 12:15 PM IST
Highlights

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருவதால், வீட்டில் தற்போது உள்ள நான்கு போட்டியாளர்களை உச்சாக படுத்தவும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றவும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து வருகிறார்கள்.
 

பிக்பாஸ் நிகழ்ச்சி 100 நாட்களை கடந்து ஒளிபரப்பாகி வருவதால், வீட்டில் தற்போது உள்ள நான்கு போட்டியாளர்களை உச்சாக படுத்தவும், நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக மாற்றவும் ஒவ்வொரு நாளும் ஏதேனும் ஒரு பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நேற்றைய தினம், வனிதா சாக்ஷி உள்ளிட்ட பிரபலங்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் விசிட் அடித்தனர். உள்ளே வந்த வனிதா சும்மா இல்லாமல், தர்ஷன் வெளியே செல்ல காரணம், ஷெரீன் என கூற அவர் தேம்பி தேம்பி அழுதது ஷெரின் ரசிகர்களுக்கு, வனிதா மேல் அதிக கோபத்தை வரவைத்து.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள புரோமோவில் , விஜய் டிவி தொகுப்பாளர்கள், நடுவர்கள், முன்னாள் போட்டியாளர்கள், சீரியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வீட்டிற்குள் நுழைத்துள்ளனர்.

குறிப்பாக இரண்டாவது சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, கடைசி வரை விளையாடிய தாடி பாலாஜி, தொகுப்பாளினி ப்ரியங்கா என அனைவரும் ஆட்டம் படத்தோடு வீட்டிற்குள் நுழைந்து, சாண்டியை ஒரு வழி செய்துவிட்டனர்.

பின் ப்ரியங்கா சாண்டியை தனியாக அழைத்து, வாழ்க்கையில் சூப்பர் முடிவை எடுத்து வேற மாதிரி போய்க்கொண்டு இருக்கிறோம் என கூறி, வெளியில் சாண்டிக்கு உள்ள ஆதரவை மறைமுகமாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பிரியங்கா இப்படி கூறியுள்ளதால், ஒருவேளை சாண்டி தான் பிக்பாஸ் வின்னரா என்கிற கேள்வியும் மக்கள் மனதில் எழுந்துள்ளது.

இல்லத்தில் இன்று.. - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. pic.twitter.com/xK3oBL52dJ

— Vijay Television (@vijaytelevision)

click me!