
பாகுபலி திரைப்படம் மூலம் உலகமே அறிந்த நடிகராகி விட்டவர் நடிகர் பிரபாஸ். தற்போது சாஹோ திரைப்படத்தில் தன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வருகிறார்.
இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் இந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போதே இவர் பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோகர் இயக்கத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருவதாக செய்திகள் வெளியானது. இந்தப் படத்தில் சம்பளம் குறைவாக பேசப்பட்டதால் இந்தப் படத்தை பிரபாஸ் நிராகரித்து விட்டதாக தற்போது ஒரு தகவல் பரவியுள்ளது.
இது குறித்து விளக்கம் அளித்துள்ள பிரபாஸ் தரப்பு, தற்போது நான் சாஹோ படத்தில் முழு கவனம் செலுத்தி வருவதால் எந்தப் படத்திலும் நடிக்க பேச்சு வார்த்தையில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.