"இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது".... "பொன்னியின் செல்வன்" படம் குறித்து வெளியான சர்ப்பிரைஸ் தகவல்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 02, 2020, 06:07 PM IST
"இனி தான் ஆட்டம் சூடு பிடிக்கப்போகுது".... "பொன்னியின் செல்வன்" படம் குறித்து வெளியான சர்ப்பிரைஸ் தகவல்...!

சுருக்கம்

இந்நிலையில் "பொன்னியின் செல்வன்" படத்திற்கான டைட்டில் ஃபான்ட் தற்போது வெளியாகியுள்ளது. 

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலை படமாக எடுக்க வேண்டும் என்ற மணிரத்னத்தின் நீண்ட நாள் கனவு தற்போது கொஞ்சம், கொஞ்சமாக உருவம் பெற்று வருகிறது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஜெயராம் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களுடன் தாய்லாந்தில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.

 

இதில் மேலும் விக்ரம் பிரபு, சரத்குமார், பிரபு, ரகுமான், கிஷோர் உள்ளிட்டோரது பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சுமார் 400 கோடி செலவில் லைகா நிறுவனம் இந்த படத்தை பிரம்மாண்ட தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் "பொன்னியின் செல்வன்" படத்திற்கான டைட்டில் ஃபான்ட் தற்போது வெளியாகியுள்ளது. வீரமான வாளின் நடுவே பொன்னியின் செல்வன் படத்திற்கான ஆங்கில தலைப்பு வெளியாகியுள்ளது. சிம்பிளாக இருந்தாலும் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன் ஃபான்ட் போஸ்டர் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

மேலும் அதில் கதை கல்கி, இசை ஏ.ஆர்.ரகுமான், ஒளிப்பதிவு ரவிவர்மன், எடிட்டர் ஸ்ரீதர் பிரசாத், கலை தோட்டா தரணி, திரைக்கதை மற்றும் இயக்கம் மணிரத்னம் என மொத்த டெக்னீக்கல் டீம் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.  

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?