
மலையாளத்தில் நடிகை பார்வதி, தற்போது 'உயரே' என்ற படத்தில் ஆசிட் வீச்சினால் பாதிக்கப்பட்ட விமான பைலட் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து பார்வதி பேட்டி ஒன்றில் கூறுகையில்.
ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக இந்த படத்தில் நடித்துள்ளேன். அதற்கான மேக்கப் போட்ட போது, பலர் என்னுடைய முகத்தை பார்த்து பேசமுடியாமல், தயங்கி தலையை கவிழ்ந்தபடி தான் பேசினர்.
சகஜமாக சிறிது பேசும் சிலர் கூட, தன்னை பார்த்து பேச விருப்பம் இல்லாமல் இப்படி நடந்து கொண்டனர். மேலும் இதுபோன்ற ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட மனிதர்களை சாரதான மனிதர்கள் இப்படி நடந்து கொள்வது வேதனை அளிப்பதாக பார்வதி தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.