Pandian Stores 2: ரூ.10 லட்சம் பணத்தை திரும்ப கேட்ட மாப்பிள்ளை வீட்டார் – அதிர்ச்சியில் மீனா மற்றும் செந்தில்!

Published : Jun 24, 2025, 06:08 PM IST
Pandian Stores 2 Senthil and Meena

சுருக்கம்

Pandian Stores 2 Senthil and Meena Shock : பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 514ஆவது எபிசோடில் பாண்டியனின் அக்காவும், மாமாவும் வீட்டிற்கு வருகின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

கடந்த சில வாரங்களாக பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலானது பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது. இதில், பாண்டியனின் மகள் ரகசிய திருமணம் செய்து கொண்டதும், பாண்டியனுக்கு பேரனோ, பேத்தியோ பிறக்க இருப்பதும் என்று மாறி மாறி கஷ்டமான செய்தியும், சந்தோஷமான செய்தியும் நடந்தது. அரசியின் திருமணம் நின்றதைத் தொடர்ந்து கல்யாணத்திற்கு கார் வாங்க வைத்திருந்த பணத்தை கல்யாணம் நின்றதைத் தொடர்ந்து செந்தில் தனது தேவைக்கு பயன்படுத்திக் கொண்டார். அதாவது, அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக தனது மாமனாரிடம் ரூ.10 லட்சம் கொடுத்தார். அரசு வேலை கிடைக்க இந்த மாதிரி ரூ.10 லட்சம் கேட்கிறார்கள் என்று அப்பாவிடம் கேட்டு அவர் முடியாது என்று சொல்லிவிட்டார்.

அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுத்த செந்தில்

அதனால், மன வேதனையில் இருந்த செந்தில் ஏற்கனவே ஒரு முறை மாமனாரிடம் ரூ.10 லட்சம் கொடுக்க சென்றார். அதன் பிறகு மனது மாறி அந்த பணத்தை கொண்டு வந்து அப்பாவிடம் கொடுத்துவிட்டார். ஆனால், இந்த முறை அவர் வங்கியில் செலுத்த வேண்டிய ரூ.10 லட்சம் பணத்தை நேராக கொண்டு சென்று தனது மாமானாரிடம் கொடுத்துவிட்டார். அதன் பிறகு தனது மனைவி மீனாவிடம் இதைப் பற்றி கூற அவரோ பதற்றத்தில் செந்திலை சத்தம் போட்டார். அந்தப் பணத்தை திரும்ப பெற சொன்னார். ஆனால் செந்திலின் மாமனார் அந்த பணத்தை உரியவரிடம் கொடுத்துவிட்டதாக கூறினார்.

எப்போது அரசு வேலை கிடைக்கும்

எப்போது வேலை கிடைக்கும் என்று சொல்லவில்லை. இருந்த போதிலும் அந்த பணத்தை பாண்டியன் கேட்பதற்கு முன்னதாக எப்படியாவது வங்கியில் கட்டிவிட வேண்டும் என்று மீனா முயற்சித்தார். அதற்கு பலன் கிடைக்கவில்லை. அலுவலகத்தில் லோனுக்கு முயற்சி செய்தார். எனினும் அது இப்போது வரை கை கொடுக்கவில்லை.

இந்த நிலையில் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் செந்திலும், மீனாவும் ரூ.10 லட்சம் பணத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தனர். அப்போது நீங்கள் பணம் கொடுத்ததில் எனக்கு உடன்பாடில்லை என்றார். அப்பாவிடம் கேட்டீர்களா என்று கேட்க அதற்கு இல்லை என்றார். மேலும், அப்போதே நான் சொன்னேன், அவர் ரூ.10 லட்சம் என்று சொன்னதுமே நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன். இப்போது அதைப் பற்றி பேசி எந்த பிரயோஜனும் இல்லை என்றார்.

நிச்சயதார்த்தம் நின்றதால் ரூ.10 லட்சம் நஷ்டம்:

இந்த நிலையில் தான் அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்ததில் தங்களுக்கு ரூ.10 லட்சம் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனை திரும்ப கொடுக்க வேண்டும் என்று பாண்டியனின் அக்காவும், மாமாவும் கேட்க வந்தனர். நிச்சயத்திற்கு பெரிய மண்டபம், சொந்தக்காரர்களுக்கு துணிமணிகள், போட்டோகிராஃபர், கார், பஸ் என்று எல்லா சேர்த்து ரூ.10 லட்சம் வந்துவிட்டது என்று கூறி அந்த தொகையை பெற்றுக் கொள்ள வந்தனர்.

அதிர்ச்சியில் செந்தில் மற்றும் மீனா:

இது குறித்து மீனா, தங்கமயில், சரவணன், கதிர் என்று எல்லோரும் ஒவ்வொன்றாக பேச, பாண்டியன் சரி, நான் கொடுத்துவிடுகிறேன் என்றார். நானே கொண்டு வந்து தருகிறேன் என்று சொல்ல, இல்ல நாங்களே வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறிவிட்டு சென்றுவிட்டனர். இது செந்திலுக்கு அதிர்ச்சியை கொடுத்தது. பிறகு கடைக்கு சென்ற செந்திலிடம் டெலிவரிக்கு சென்றுவிட்டு வரும் போது வங்கியிலிருந்து பனத்தை எடுத்துக் கொண்டு வா என்று பாண்டியன் கூறினார். இதனால் செந்தில் அதிர்ச்சி அடைந்தார். என்ன செய்வது, ஏது செய்துவது என்ற குழப்பத்தில் இதைப் பற்றி கதிரிடம் கூறினார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய 514ஆவது எபிசோடு முடிந்தது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

துருப்புச்சீட்டாக மாறிய விசாலாட்சி! ஆதி குணசேகரனை காப்பாற்றுவாரா? கம்பி எண்ண வைப்பாரா? எதிர்நீச்சல் தொடர்கிறது
கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்