பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: அரசு வேலை கிடைக்க ரூ.10 லட்சம் கொடுத்த செந்தில் – அதிர்ச்சியில் மீனா!

Published : Jun 13, 2025, 04:34 PM IST
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

சுருக்கம்

Pandian Stores 2 Serial Update : அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக ரூ.10 லட்சம் பணத்தை எடுத்து அவரது மாமனாரிடம் செந்தில் கொடுத்துள்ளது மீனாவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pandian Stores 2 Serial Update : விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ் 2. குடும்பத்தோடு கண்டு ரசிக்கும் சீரியல்களில் இந்த சீரியலும் ஒன்று. ஏராளமானோ இந்த சீரியலை பார்த்து வருகின்றனர். அப்பா, அம்மா, அண்ணன், தம்பி, அக்கா, தங்கை என்று குடும்பக் கதையை மையப்படுத்தி இந்த சீரியல் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

ஏற்கனவே இந்த சீரியலில் அக்கா மற்றும் அண்ணன், தம்பிகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் கடைசியாக தங்கை அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால், அதற்குள்ளாக அரசி யாருக்கும் தெரியாமல் தனக்கு தானே திருமணம் செய்து கொண்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்தார். அது வேறு யாருமில்லை, அரசிக்கு சொந்த தாய்மாமா மகன் தான். என்னதான் ரெண்டு வீட்டுக்கும் பகை இருந்தாலும் அரசி அவரை பிடிக்காமல் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது ஒரு புறம் இருக்க செந்தில் தனக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்தார். இதற்கு மீனா மட்டுமின்றி அவரது அப்பாவும் ஆதரவு தெரிவித்து வந்தார். அவர் மூலமாக குன்றத்தூரிலேயே அரசு வேலை வாங்க முயற்சிகள் எடுக்கப்பட்டது. அதற்கு ரூ.10 லட்சம் கட்ட வேண்டும். இது குறித்து பாண்டியனிடம் கேட்டும் முடியாது என்று கூறிவிட்டார். அதன் பிறகு அரசிக்கு திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதனால், செந்தில் ரூ.10 லட்சம் கொடுப்பது பற்றி யோசிக்கவே இல்லை.

அரசி திருமணம் செய்த நிலையில், ரூ.10 லட்சம் பணத்தை வங்கியில் போட சொல்லி பாண்டியன் கொடுத்துள்ளார். ஆனால், செந்தில் அந்த பணத்தை அவரது மாமனாரிடம் கொடுத்து அரசு வேலை வேண்டும் என்று கேட்டுள்ளார். அவர் எதிர்பார்த்த மாதிரி அரசு வேலை கிடைக்குமா? அப்படியே கிடைத்தாலும் என்ன வேலை கிடைக்கும்? என்பது குறித்து பொற்றுத்திருந்து பார்க்க வேண்டும்.

இது குறித்து செந்தில் மீனாவிடம் தெரியப்படுத்தவே அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். ஏற்கனவே அரசு வேலைக்கு ரூ.10 லட்சம் கொடுக்க கூடாது என்று மீனா அவரிடம் கூறியிருந்தார். அப்படியிருக்கும் போது அதையும் மீறி செந்தில் கொடுத்தது அவருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன் பிறகு என்ன நடக்கும் என்பதை இனி வரும் காலங்களில் பொறுமையாக இருந்து பார்க்கலாம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?