
கடந்த சில நாட்களுக்கு முன் நடிகைகள் டிஸ்கோ சாந்தி மற்றும் நடிகை லலிதாகுமாரி ஆகியோர்களின் சகோதரர் அருண் மொழிவர்மனின் மகள் அப்ரினா காணாமல் போனார். இதுகுறித்து காவல் துறையினர் ஐந்து நாட்கள் தீவிரமாக விசாரித்து வந்த போதும், எந்த ஒரு ஆதாரமும் அவர்களுக்குக் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் கடந்த வாரம் டிஸ்கோ சாந்தி மற்றும் லலிதா குமாரி ஆகியோர் பத்திரிகையாளர்களைச் சந்தித்து, தங்களுடைய அண்ணன் மகள் அப்ரினாவைக் கண்டுபிடித்துக் கொடுக்குமாறு அழுது கதறினர்.
இந்நிலையில் தற்போது அப்ரினா இன்று பாதுகாப்புடன் வீடு திரும்பியுள்ளதாக நடிகரும், லலிதாகுமாரியின் முன்னாள் கணவருமான பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
பிரகாஷ் ராஜின் டிவிட்டர் பதிவு:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.