நடிகைகள் எடுக்கும் போது நாங்க எடுக்க கூடாதா? நிர்வாண போட்டோ ஷுட் நடத்திய பிரபல நடிகர்..!

 
Published : Jan 19, 2018, 03:29 PM ISTUpdated : Sep 19, 2018, 01:50 AM IST
நடிகைகள் எடுக்கும் போது நாங்க எடுக்க கூடாதா?  நிர்வாண போட்டோ ஷுட் நடத்திய பிரபல நடிகர்..!

சுருக்கம்

nude photo shoot take young actor

"சப்னா பபுல் கா பிதாய்” என்கிற தொலைக்காட்சித் தொடர் மூலம் நடித்து பிரபலமானவர் அங்கத் ஹசிஜா. இவர் தற்போது பல்வேறு தொடர்களில் நடித்து வருகிரார். பிதாய் தொடரில் நடித்ததன் மூலம் புகழின் உச்சிக்கு சென்றார். இந்நிலையில் அவர் பட வாய்ப்புக்காக துணிச்சலான போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார்.

அங்கத் நிர்வாணமாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

தான் நிர்வாணமாக புகைப்படம் எடுத்து வெளியிட்டதை பார்த்து  தனது குடும்பத்தாரும், நண்பர்களும், சக கலைஞர்களும் அதிர்ச்சி அடைந்ததாக தெரிவித்துள்ளார் அங்கத்.

நிர்வாணமாக போட்டோ ஷுட் நடத்த வேண்டிய அவசியம் என்ன என்று நண்பர்களும், குடும்பத்தாரும் கேட்டனர். அதற்கு பாலிவுட் ஸ்டார்கள் கவர்ச்சியாக போட்டோ ஷூட் நடத்தும் போது, டிவி ஸ்டார்கள் நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது என்கிறார் அங்கத்.

அங்கத் கடந்த மாதம் தான் பாத்டப்பில் சிகரெட்டை கையில் வைத்தபடி நிர்வாணமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார் தனது இன்ஸ்டாகிராமில் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து பேசிய அவர் சின்னத்திரையையோ, சின்னத்திரை பிரபலங்களையோ சாதாரணமாக எடை போடாதீர்கள். தற்போது பெரிய திரையுலகில் பெரிய ஆட்களாக இருப்பவர்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள். படங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரம் செய்கிறார்கள் என கூலாக தெரிவித்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?