அத்தனை கோடிகளுக்காகத்தான் ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நடிக்க சம்மதித்தாரா நயன்தாரா?...

By Muthurama LingamFirst Published Nov 11, 2019, 1:01 PM IST
Highlights

‘எல்.கே.ஜி’படத்துக்குக் கதை வசனம் எழுதி நடித்த வானொளி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி அடுத்து ‘மூக்குத்தி அம்மன்’என்ற படத்தை என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியா அல்லது தனி கேரக்டராக வருகிறாரா என்று தெரியாத நிலையில் தனது லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கணக்கில் கொள்ளாமல் நடிக்க சம்மதித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரஜினி,அஜீத்,விஜய் என்று டாப் ஸ்டார்களுடன் ஜோடி போட்டு வந்த நயன்தாரா ஆர்.ஜே.பாலாஜியின் இயக்கத்தில் நடிக்க சம்மதித்திருப்பது கோடம்பாக்கத்தை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் அவர் அப்படத்துக்கு கேட்டிருக்கும் சம்பளம் மற்ற நடிகைகளை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

‘எல்.கே.ஜி’படத்துக்குக் கதை வசனம் எழுதி நடித்த வானொளி நிகழ்ச்சி தொகுப்பாளர் பாலாஜி அடுத்து ‘மூக்குத்தி அம்மன்’என்ற படத்தை என்.ஜே.சரவணன் என்பவருடன் இணைந்து இயக்கி நடிக்கிறார். இப்படத்தில் பாலாஜிக்கு ஜோடியா அல்லது தனி கேரக்டராக வருகிறாரா என்று தெரியாத நிலையில் தனது லேடி சூப்பர் ஸ்டார் அந்தஸ்தை கணக்கில் கொள்ளாமல் நடிக்க சம்மதித்திருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதற்குக் காரணம் பாலாஜி சொன்ன கதைதான் என்று துவக்கத்தில் கிளம்பிய செய்திகளை அவரது எதிர்க்கட்சி வட்டாரங்கள் மறுக்கின்றன. இன்றைக்கு தமிழ் சினிமாவில் கோடி கோடியாய்க் கொட்டி படங்களைத் தயாரிக்கத் துவங்கியிருக்கும் வேல்ஸ் நிறுவனத் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பாலாஜி கதை சொல்லப் போகும் முன்பே, நயன்தாரா மற்ற படங்களில் வாங்கும் சம்பளத்தை விட இரு மடங்கு தருவதாய் ஆசை வார்த்தை காட்டப்பட்ட பிறகே கதை சொல்லச் சென்றாராம். நயன் உடனே ஓ.கே.சொன்னதற்குக் காரணம் அந்த சம்பளம் தான் என்கிறார்கள்.விஜய்யின் ‘பிகில்’ ரஜினியின் ‘தர்பார்’படங்களில் தலா 4 கோடி வாங்கிய நயன் மூக்குத்தி அம்மனுக்கு 8 கோடி சம்பளம் பெறுகிறாராம்.

click me!