இந்திய அளவில் நயன்தாரா, இயக்குனர் ரஞ்சித்துக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! குவியும் வாழ்த்து!

Published : Dec 12, 2018, 06:28 PM IST
இந்திய அளவில் நயன்தாரா, இயக்குனர் ரஞ்சித்துக்கு கிடைத்த மிகப்பெரிய கெளரவம்! குவியும் வாழ்த்து!

சுருக்கம்

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி என பல்வேறு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அதில் இந்த வருடம் சிறந்தவர்கள் யார் என கருத்து கணிப்பு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

ஒவ்வொரு வருடத்தின் முடிவிலும், சிறந்த கதாநாயகன், கதாநாயகி என பல்வேறு பட்டியல்கள் தயாரிக்கப்பட்டு, அதில் இந்த வருடம் சிறந்தவர்கள் யார் என கருத்து கணிப்பு எடுக்கப்படுவது வழக்கமான ஒன்று தான்.

அந்த வகையில் இளம் வயதில் அதிக செல்வாக்கு பெற்ற பிரபலங்கள் யார் என GQ  என்கிற நிறுவனம் எடுத்த கருத்து கணிப்பு முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.

அதில் தென்னிந்திய அளவியில் லேடி சூப்பர் ஸ்டார் நடிகை நயன்தாரா, இயக்குனர் பா.ரஞ்சித், மற்றும் நடிகை பார்வதி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் இந்த லிஸ்டில் நடிகை டாப்ஸியின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆனால் அவர் சமீப காலமாக தமிழ் திரைப்படங்களை தவிர்த்து பாலிவுட் திரையுலகில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்திய அளவில் எடுக்கப்பட்ட இந்த கருத்து கணிப்பு முடிவுகளால், நயன்தாராவுக்கும், பா.ரஞ்சித்துக்கும் மேலும் கௌரவத்தை தேடி தந்துள்ளது. அதே போல் பலர் இவர்களுக்கு தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மலையாள நடிகர் ஸ்ரீனிவாசன் காலமானார் - அவர் இத்தனை தமிழ் படங்களில் நடித்துள்ளாரா?
மாற்றப்படும் பராசக்தி ரிலீஸ் தேதி... ஜனநாயகனை காலி பண்ண என்னென்ன பண்றாங்க பாருங்க..!