நடிகர் சங்க தேர்தல்! நடிகை ராதிகா வெளியிட்ட முடிவு!

By manimegalai aFirst Published May 29, 2019, 7:06 PM IST
Highlights

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசரின் அணியான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  
 

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு, வரும் ஜூன் 23ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் நடிகர் நாசரின் அணியான பாண்டவர் அணி வெற்றி பெற்றது.  

வெற்றி பெற்ற பின் இந்த அணியின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை எனவும், பல்வேறு மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.  இதைத்தொடர்ந்து தற்போது பாண்டவர் அணி சார்பில் நாசர் அணியினர் போட்டியிட உள்ளனர்.

ஆனால் கடந்த முறை நாசர் அணிக்கு, ஆதரவு கொடுத்த பலர் இவர்களுக்கு எதிராகவே திரும்பியுள்ளனர். மேலும் ராதாரவி, சரத்குமார் நடிகர் சங்கத்தில் புகார்கள் இருப்பதால் இம்முறை நடிகை ராதிகாவை தேர்தலில் களமிறக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டது.

இது குறித்து நடிகை ராதிகா முதல் முறையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்... நடிகர் சங்க தேர்தல் சம்பந்தமாக யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும்,  நடிப்பில் மட்டுமே தான் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் நடிகர் சங்க தேர்தல் குறித்து எழும் வதந்தியை யாரும் நம்ப வேண்டாம் என்றும், தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை என தன்னுடைய முடிவை தெரிவித்துள்ளார்.

click me!