’இந்தியன் 2’இழுபறியில் இருப்பதால், அதற்கு முன்பாக ‘முதல்வன்2’ எடுக்க முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஷங்கர், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனை இப்படத்தில் வில்லனாக்க முடிவெ செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
’இந்தியன் 2’இழுபறியில் இருப்பதால், அதற்கு முன்பாக ‘முதல்வன்2’ எடுக்க முடிவு செய்திருக்கும் இயக்குநர் ஷங்கர், முதல் பாகத்தில் ஹீரோவாக நடித்த அர்ஜுனை இப்படத்தில் வில்லனாக்க முடிவெ செய்திருப்பதாக தகவல்கள் வருகின்றன.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜூன் நடித்து 1999-ம் ஆண்டு திரைக்கு வந்து வெற்றி பெற்ற முதல்வன் படத்தின் 2-ம் பாகத்தை எடுக்க உள்ளதாக சில மாதங்களுக்கு முன்பு தகவல் வெளியானது.இந்த படத்தை ரஜினி அல்லது கமலை வைத்து எடுக்க உள்ளதாகவும் அவர்கள் இல்லை என்றால் விஜய்யை வைத்து முதல்வன் 2-ம் பாகத்தை இயக்க உள்ளதாகவும் இயக்குனர் ஷங்கர் சமீபத்தில் பேட்டி ஒன்றில் தெரிவித்து இருந்தார். ரஜினி, கமல் இருவரும் அரசியலில் பிசியாக உள்ளதால் ஷங்கர் விஜய்யை வைத்து எடுக்க திட்டமிட்டு இருப்பதாக கூறுகிறார்கள். இருவரும் சமீபத்தில் நேரில் சந்தித்து இதுகுறித்து பேசி இருக்கிறார்கள்.
விஜய் தற்போது அட்லி இயக்கும் ‘பிகில்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த கையோடு ‘மாநகரம்’, ‘கைதி’ ஆகிய படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் ‘தளபதி 64’ படத்தில் நடிக்கிறார் விஜய். அதன் பின்னர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க தேதிகளை ஒதுக்கியுள்ளார்.முதல்வன் படத்தை இயக்கும் போது ஷங்கரின் தேர்வாக விஜய் இருந்ததும், சில காரணங்களால் அவர் ஏற்று கொள்ளாமல் போகவே இறுதியாக அந்த படம் அர்ஜூனிடம் சென்று, மிகப்பெரிய வெற்றி படமானது.
படத்தில் அர்ஜூன் ஒருநாள் முதல்வராக வந்து கலக்கி இருப்பார். இறுதியில் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு முதல் அமைச்சர் ஆவார். இதன் தொடர்ச்சி என்பதால் விஜய்யும் முதல் அமைச்சர் வேடத்தில் தான் நடிப்பார் என்கிறார்கள். படத்தில் அர்ஜூனையும் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடக்கிறது. அதுவும் எந்த வேடத்தில்? ரகுவரன் நடித்த வில்லன் வேடத்தில். இந்த ஷங்கர் எப்படியெல்லாம் ப்ளான் பண்றாரு பாருங்க.