
ஒவ்வொரு வருடமும் சிறந்த கலைஞர்கள், நடிகர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்த தொழில் நுட்ப கலைஞர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான தேசிய விருது நேற்று அறிவிக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் மட்டும் 5 பேருக்கு தேசிய விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அறிந்த பிரபலங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்கள் தொடர்ந்து விருது பெற்றவர்களுக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் அண்மை காலமாக சரியான அங்கீகாரம் கலைஞர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை என்று கூறப்பட்டு வரும் நிலையில் முதன்முறையாக தேசிய விருது அறிவிப்புகள் குறித்து ஏ.ஆர். முருகதாஸ் தன்னுடைய மனதில் பட்ட கருத்தை ட்விட்டர் மூலம் தெரிவித்துள்ளார்.
அதில், அவர் கூறி இருப்பது தேசிய விருத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது, சிபாரிசின் அடிப்படையில் தான் தேர்வுக்குழு நடுவர்கள் விருது அறிவித்துள்ளதாக பலரது முகத்திரையை கிழித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.