கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: நடிகரின் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்த மும்பை போலீஸ்!

Published : Sep 17, 2018, 12:29 PM ISTUpdated : Sep 19, 2018, 09:28 AM IST
கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும்: நடிகரின் கோரிக்கைக்கு பதிலடி கொடுத்த மும்பை போலீஸ்!

சுருக்கம்

இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கஞ்சாவை போதைப்பொருளாகாரக் கருதாமல் அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகரும், தயாரி்ப்பாளருமான உதய் சோப்ரா தெரிவித்துள்ளார்.

இந்திய கலாச்சாரத்துடன் தொடர்புடைய கஞ்சாவை போதைப்பொருளாகாரக் கருதாமல் அதை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்று பாலிவுட் நடிகரும், தயாரி்ப்பாளருமான உதய் சோப்ரா தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக உயத் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கையில், கஞ்சாவை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என்பது விருப்பம்.கஞ்சா நமது கலாச்சாரத்துடன் தொடர்புடையது, ஒரு பகுதியாகும். இதை சட்டப்பூர்வமாக அங்கீகரித்தால், அரசுக்கு வரி மூலம் நன்கு வருவாய் கிடைக்கும். அரசே விற்பனை செய்வதன் மூலம் இந்த தொழிலில் சட்டவிரோதமாக ஈடுபட்டுள்ளவர்களும் நிறுத்திவிடுவார்கள். மருத்துவரீதியாகவும் கஞ்சா பலன் தரக்கூடியது என்று தெரிவித்தார். 

நடிகர் உதய் சோப்ராவுக்கு ஆதரவாகவும், எதிராகவும் ட்விட்டரில் பல்வேறு கருத்துக்கள் பதிவாகின. இதையடுத்து, நடிகர் உதய் சோப்ராவுக்கு மும்பை போலீஸார் தங்களின் ட்விட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டனர். அதில், உதய் சார் இந்திய குடிமகனாக உங்கள் கருத்தை பொது இடத்தில் தெரிவிக்க உரிமை இருக்கிறது. ஆனால், இப்போதுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின்படி, கஞ்சாவை வைத்திருப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது சட்டப்படி தண்டனைக்குறிய குற்றமாகும் என்பதை நீங்கள் அறிவீர்கள் என நம்புகிறோம் எனத் தெரிவித்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரசிகர்களின் மனதை திரும்பவும் கொள்ளை கொண்ட அந்த ஒரு சீன் எது தெரியுமா? கார்த்திகை தீபம் சீரியல்!
கார் விபத்து: நடுரோட்டில் பஞ்சாயத்தை முடித்து வைத்த சிவகார்த்திகேயன்! ரியல் லைஃப் 'அமரன்' என பாராட்டும் ரசிகர்கள்!