
மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் மோகன் லால். தற்போது அவருடைய மகன் பிரணவ், முன்னணி இயக்குனர் ஜீது ஜோசப் இயக்கத்தில் 'ஆதி' என்கிற படத்தில் அறிமுகமாக உள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு கேரளாவைச் சுற்றியுள்ள இடங்களில் படமாக்கப்பட்டு வந்தது. அப்போது சண்டைக்காட்சியின் போது பிரணவிற்கு கையில் பலமாக அடிப்பட்டு ரத்தம் கொட்டியுள்ளது.
பின் படக்குழுவினர் உடனடியாக பிரணவை அருகில் உள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அங்கு அவருக்கு கையில் இரண்டு தையல் போடப்பட்டது. மேலும் ஒரு வாரத்திற்கு அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளார்களாம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.