சிறப்பு காட்சி ஒளிபரப்பினால் கடும் நடவடிக்கை..! அமைச்சர் கடம்பூர் ராஜூ எச்சரிக்கை!

By manimegalai aFirst Published Oct 22, 2019, 1:41 PM IST
Highlights

தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் கை கோர்த்துள்ள, 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

தளபதி விஜய் மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில் கை கோர்த்துள்ள, 'பிகில்' திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, 25 ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தை வரவேற்க இப்போதே தயாராக உள்ளனர் விஜய் ரசிகர்கள். அதே போல் படக்குழுவினரும் 'பிகில்' பட ப்ரமோஷன் பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

இந்நிலையில் பிரபல செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ள தமிழக செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, 'பிகில்' படத்தின் சிறப்பு காட்சி அனுமதி இன்றி, ஏதேனும் திரையரங்கங்களில் ஒளிபரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

அதே போல் அனுமதி தரும் முன்னனே, அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பது அரசின் கடமை என்றும், கடம்பூர் ராஜூ தற்போது கொடுத்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி உரிய முறையில் கேட்டல் விதிமுறைகளை விளக்கி அனுமதி தரப்படும் என அமைச்சர் கூறியுள்ளது விஜய் ரசிகர்களையும், திரையரங்கு உரிமையாளர்களும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

click me!