கட்டிய தாலியின் ஈரம் கூட இன்னும் காயல; அதுக்குள்ள புருஷனை இழந்த துளசி; மகளே என் மருமகளே சீரியல் அப்டேட்!

Published : Sep 10, 2025, 12:05 AM IST
Magale En Marumagale Today Episode

சுருக்கம்

Magale En Marumagale Today Episode Muthu Funeral Function : மகளே என் மருமகளே சீரியலில் கட்டிய தாலியின் ஈரம் கூட முழுவதுமாக காய்வதற்குள்ளாக கணவனை இழந்த துளசியின் நிலை பற்றி இன்றைய தொகுப்பில் பார்க்கலாம்.

Magale En Marumagale Today Episode Muthu Funeral Function : விஜய் டிவியில் ஒளிபரப்பு செய்யப்படும் சீரியல்களில் ஒன்று தான் மகளே என் மருமகளே. கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் மகளே என் மருமகளே என்ற சீரியலானது ஒளிபரப்பு செய்ப்பட்டு வருகிறது. தற்போது வரை 24 எபிசோடுகளை கடந்துள்ளது. சீரியலின் முதல் எபிசோடில் ஹீரோ, ஹீரோயின் எண்ட்ரியோடு தொடங்கி காதல் மலர ஆரம்பித்தது. ஆனால், அதற்குள்ளாக சீரியலின் டைட்டிலுக்கு ஏற்ப மருமகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்த மாமியார், மகனுக்கு கல்யாண ஏற்பாடுகளையும் செய்தார். கல்யாணமும் நல்லபடியாக நடந்து முடிந்தது. ஆனால், அவர் கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள்ளாக கரண்ட் ஷாக் அடித்து ஹீரோ சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். 

சீரியலின் ஹீரோயினுக்கு கழுத்தில் தாலி மட்டுமே கட்டிய ஹீரோ அவருக்கு அந்த சந்தோஷத்தை தான் கொடுத்தார் என்று கூறிய மாமியார், மருமகளுக்கு பூவையும் பொட்டையும் கொடுத்தார். மகளே என் மருமகளே என்ற சீரியலில் அவினாஷ் அசோக் முத்துவேல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தான் சீரியலின் முதல் ஹீரோ. அதன் பின்னர் வர்ஷினி சுரேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். நவின் குமார் சின்னத்தம்பி ரோலில் நடித்துள்ளார். ரேஷ்மா பசுபுலேட்டி நாச்சியார் ரோலில் நடித்துள்ளார்.

இந்த சீரியலானது ஸ்டார்மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மகுவா ஓ மகுவா என்ற சீரியலின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் வர்ஷினி சுரேஷ் இதற்கு முன்னதாக நீ நான் காதல் என்ற சீரியலில் நடித்துள்ளார். அந்த சீரியலில் பணக்கார வீட்டு பெண்ணாக படித்து வேலை பார்க்கும் பெண் ரோலில் நடித்திருந்தார். தற்போது மகளே என் மருமகளே என்ற சீரியலில் ஒரு நடுத்தர வீட்டு பெண் ரோலில் நடித்துள்ளார். ஆனால், ரேஷ்மா பசுபுலேட்டி பணக்கார வீட்டு பெண்ணாகவும் ஊருக்கு நாட்டாமை அதாவது பஞ்சாயத்து சொல்லும் அபிராமி நாச்சியார் என்ற ரோலில் நடித்துள்ளார். இவரது மகன் தான் நவீன் குமார். முத்து என்ற ரோலில் நடித்துள்ளார். அவினாஷ் அசோக் சின்னத்தம்பி என்ற ரோலில் அபிராமி வீட்டு வேலைக்காரனாக நடித்து வருகிறார்.

இந்த சீரியலானது மாமியார் மற்றும் மருமகள் இடையிலான கதையை மையப்படுத்திய சீரியலாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?