தேனாம்பேட்டை காவல் நிலையம் வந்த லதா ரஜினிகாந்த்...

Published : Feb 02, 2019, 01:13 PM IST
தேனாம்பேட்டை காவல் நிலையம் வந்த லதா ரஜினிகாந்த்...

சுருக்கம்

தங்களது இளையமகள் செளந்தர்யாவுக்குத் திருமணம் நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திருமணத்துக்குப் பாதுகாப்பு தருமாறு மனு அளிக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார் லதா ரஜினிகாந்த்.

தங்களது இளையமகள் செளந்தர்யாவுக்குத் திருமணம் நடக்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் திருமணத்துக்குப் பாதுகாப்பு தருமாறு மனு அளிக்க தேனாம்பேட்டை காவல் நிலையத்துக்கு வந்தார் லதா ரஜினிகாந்த்.

துவக்கத்தில் குடும்பத்தினர் மட்டும் கலந்துகொள்வதாக நடத்த்ப்படவிருந்த செளந்தர்யா-விசாகன் திருமணத்துக்கு சினிமா பிரபலங்கள் உட்பட பல வி.வி.ஐ.பி.களை அழைக்க ரஜினி குடும்பம் முடிவு செய்திருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில் திருமணத்திற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஒரு மனு கொடுத்துள்ளார்.

 அந்த மனுவில், வரும் 10-ந் தேதி அன்று எங்களது மகள் சவுந்தர்யா திருமணம் போயஸ் கார்டன் வீட்டில் நடைபெற உள்ளதால் இந்த கல்யாண விழாவில் மிக முக்கிய பிரபலங்களான சினிமா நட்சத்திரங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த மனுவில் பிப்ரவரி 10-ந் தேதி மதியம் 3.10 வரை மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும் என்றும், 12-ந் தேதி வரவேற்பு நடைபெறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?